தமிழக செய்திகள்

சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை..!

சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

தினத்தந்தி

தேனி,

தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவி உள்ளது. இந்த அருவிக்கு ஹைவேவிஸ் தூவானம் அணையில் இருந்து நீர்வரத்து ஏற்படும். இங்கு தினமும் தேனி மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். தற்போது அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் சாரல் மழை பெய்வதால் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இந்த நிலையில் அருவிக்கு செல்லும் வழியில் யானைகள் அதன் குட்டிகளுடன் முகாமிட்டுள்ளன. இதன் காரணமாக சுருளி அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் வருத்தமடைந்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது