தமிழக செய்திகள்

வெள்ளப்பெருக்கு காரணமாக கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

கொடிவேரி அணை வழியாக வினாடிக்கு 2,300 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது, இதனால் அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தினத்தந்தி

கடத்தூர்,

ஈரோடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்று கோபி அருகே உள்ள கொடிவேரி அணை. ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி அருகே உள்ள திருப்பூர், சேலம், கோவை மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கொடிவேரி தடுப்பணைக்கு குளித்து மகிழ வருகிறார்கள்.

இந்தநிலையில் கொடிவேரி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், பவானிசாகர் அணைக்கு வரும் உபரிநீர் பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன்காரணமாக கொடிவேரி அணை வழியாக வினாடிக்கு 2,300 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது, இதனால் அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பாதுகாப்பு கருதி கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். நீர் வரத்து குறைந்த பின் வழக்கம்போல் அனுமதி வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பவானி ஆற்றின் கரையோரம் பொதுமக்கள் கால்நடைகளை மேய்க்கவோ, துணி துவைக்கவோ செல்லக்கூடாது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை