தமிழக செய்திகள்

திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

தண்ணீர் அதிக அளவில் வருவதால் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

திருவட்டார்,

குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மலையோர பகுதிகளில் தண்ணீர் அதிக அளவு வருவதால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் பேச்சிப்பாறை அனையில் இருந்து மறுகால் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இதனால், தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. தற்போது சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருகிறார்கள். அவர்கள் அருவியில் குளிக்காமல் வெளியில் இருந்து அருவியை சுற்றி செல்கிறார்கள்.

திற்பரப்பு பேரூராட்சி சார்பாக ஊழியர்கள் தடை உத்தரவு போட்டு இருக்கிறார்கள். ஆறு குளங்களில் தண்ணீர் அதிக அளவு ஆர்பரித்து வருகிறது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்