தமிழக செய்திகள்

செம்மண் கடத்திய டிராக்டர் பறிமுதல்

செம்மண் கடத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

தினத்தந்தி

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோவிலூர் கிராமத்தில் சட்டவிரோதமாக செம்மண் அள்ளப்படுவதாக திருமானூர் போலீசாருக்கு, கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம் புகார் அளித்தார்.இது குறித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு டிராக்டர் டிப்பரில் செம்மண் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்து, டிரைவரான பெரம்பலூர் மாவட்டம், பெரியபாளையம் கிராமத்தை சேர்ந்த மேகநாதன்(வயது 38) என்பவரை கைது செய்து அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு