தமிழக செய்திகள்

5 ஊராட்சிகளுக்கு டிராக்டர்கள்

உளுந்தூர்பேட்டையில் 5 ஊராட்சிகளுக்கு டிராக்டர்களை மணிக்கண்ணன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

தினத்தந்தி

உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டையில் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் எலவனாசூர்கோட்டை, எறையூர், குன்னத்தூர், கிளியூர், காட்டுஎடையார் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு விவசாய தேவைகளுக்காகவும் சுகாதார பணிகளுக்காகவும் டிராக்டர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கு எம்.எல்.ஏ.வும், தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகங்களின் ஆட்சி மன்ற குழு உறுப்பினருமான ஏ.ஜே. மணிக்கண்ணன் தலைமை தாங்கி ஊராட்சி மன்ற தலைவர்களிடம் டிராக்டர்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் ராஜவேல், உளுந்தூர்பேட்டை நகராட்சி துணைத்தலைவர் வைத்தியநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயராமன் ராஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் நந்தகுமார், சிவா, பாலசிங்கம், அனுசியா ஆரோக்கியராஜ், துணைத்தலைவர் டேவிட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து