தமிழக செய்திகள்

தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி

அரசு போக்குவரத்து கழகங்களில் போதுமான ஆட்களை பணிநியமனம் செய்ய வேண்டும். ஒப்பந்த முறையில் ஆட்களை நியமனம் செய்வதை கைவிட வேண்டும். 8 மணிநேரம் வேலை என்பதை 12 மணிநேரமாக மாற்றி சட்டசபையில் மசோதா தாக்கல் நிறைவேற்றம் செய்வதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய சங்க துணைத்தலைவர் பாரதிமுருகன் தலைமை தாங்கினார். இதில் துணை பொதுச்செயலாளர்கள் ராமகிருஷ்ணன், ரவீந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். 

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு