தமிழக செய்திகள்

பஸ் மோதி வியாபாரி பலி

ரத்தினகிரி அருகே பஸ் மோதி வியாபாரி பலியானார்.

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜாபர்ஷரீப். இடியாப்பம் தயாரித்து விற்பனை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ஜாபர் ஷரீப் மேல்விஷாரம் பகுதியிலுள்ள நந்தியாலம் கூட்ரோடு சந்திப்பில் சாலையைக் கடக்க மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது ஆற்காட்டில் இருந்து வேலூர் நோக்கி சென்ற பஸ் ஜாபர் ஷரீப் மீது மோதியது. இதில் ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் ரத்தினகிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்