தமிழக செய்திகள்

தள்ளுவண்டி கடை அமைக்க அனுமதிகோரி வியாபாரிகள் மனு

தள்ளுவண்டி கடை அமைக்க அனுமதிகோரி வியாபாரிகள் மனு அளிக்கப்பட்டது.

கரூர் மாவட்ட கரூர் பஸ் நிலைய பழ வியாபாரிகள் சங்கம் சார்பில் கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் ஒரு மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- நாங்கள் கடந்த 30 ஆண்டுகளாக தள்ளுவண்டி கடை அமைத்து பழக்கடை, பலகாரக்கடை உள்ளிட்ட தொழில் செய்து வருகிறோம். மாநகராட்சி ஒதுக்கி கொடுத்த இடத்தில் பொதுமக்களுக்கு மற்றும் போக்குவரத்திற்கு எவ்வித இடையூறுமின்றி தொழில் செய்து வருகிறோம்.தற்போது கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதால் எங்களுடைய வாழ்வாதாரம் மிகவும் பாதிப்படைந்துள்ளது. எனவே எங்களுடைய வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மீண்டும் கடையை திறப்பதற்கு எங்களுக்கு அனுமதி தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு