தமிழக செய்திகள்

ஜி.எஸ்.டி வரி உயர்வை கண்டித்து வணிகர்களின் ஆர்ப்பாட்டம் திட்டமிட்டப்படி நடைபெறும் - விக்கிரமராஜா அறிவிப்பு

வணிகர்களின் ஆர்ப்பாட்டம் திட்டமிட்டப்படி நடைபெறும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

47-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீதான வரி விதிப்புக்கும், அன்றாட பயன்பாட்டு பொருட்கள் மீதான வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாநில வேளாண் விளைப் பொருட்களுக்கான செஸ் வரி விதிப்பை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தியும் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் 22-ந்தேதி காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

தமிழகம் தழுவிய வணிகர்களின் இந்த கட்டண ஆர்ப்பாட்டம் திட்டமிட்டபடி நடைபெற இருக்கிறது. திட்டமிட்டு சில குழப்பமான செய்திகளை பதிவிட்டு, ஆர்ப்பாட்ட உணர்வை நீர்த்து போக செய்கின்ற செயலை ஒருசிலர் பரப்ப முற்படுகிறார்கள். பேரமைப்பை பொருத்தவரையில் மக்கள் நலனிலும், வணிகர் நலனிலும் ஒருமித்த கருத்தோடு எப்போதும் போல் தனது உணர்வை வெளிப்படுத்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு