தமிழக செய்திகள்

வால்பாறையில் வணிகர்கள் ஆர்ப்பாட்டம்

டேன்டீ தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த சம்பளம் வழங்க கோரி வால்பாறையில் வணிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

வால்பாறை

வால்பாறைக்கு மாலை 6 மணிக்கு மேல் ஆழியாறு சோதனைச்சாவடியில் இருந்து சுற்றுலா பயணிகள் செல்வதற்கு வனத்துறையினர் விதித்த தடையை நீக்க வேண்டும். தனியார் மற்றும் அரசு தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த சம்பளம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வால்பாறை வணிகர் சம்மேளனம் சார்பில், பழைய பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புகளில் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். வால்பாறை நகராட்சி மார்க்கெட் கடைகளில் பராமரிப்பு பணிகளை உடனே செய்ய வேண்டும். படகு இல்லம், தாவரவியல் பூங்காவை பராமரிப்பு செய்து கொடுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது. இதில் தமிழக வணிகர் சம்மேளன நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து