தமிழக செய்திகள்

சென்னையில் கார் மோதி போக்குவரத்து காவலர் உயிரிழப்பு

சென்னையில் கார் மோதி போக்குவரத்து காவலர் உயிரிழந்தார்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை பள்ளிகரணை அருகே வாகனத் தணிக்கையின் போது கார் மோதியதில் போக்குவரத்து முதன்மை காவலர் மேகநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மடிப்பாக்கத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அதிவேகமாக வந்த காரை அவர் மறித்துள்ளார். ஆனால் அந்த கார் நிற்காமல் சென்றுள்ளது.

இதனால் அந்த காரை மேகநாதன் தனது இருசக்கர வாகனத்தில் துரத்தி சென்றுள்ளார். அப்போது சாய்ராம் என்பவர் ஓட்டிய கார் பைக் மீது மோதி மேகநாதன் இழுத்துச் செல்லப்பட்டார். இதனையடுத்து காவலர் மேகநாதன் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து காவலர் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் மதுபோதையில் இருந்த சாய்ராம் என்பவரை போலீசார் கைது செய்தனர். விபத்து தொடர்பாக சென்னை மாநகர காவல்துறை உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சண்டிகாரில் காலிஸ்தானிய பயங்கரவாதிகள் பெயரில் 26 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்: 4ம் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி