கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

தாய்ப்பால் குடிக்கும்போது விபரீதம்.. பச்சிளம் பெண் குழந்தை மூச்சுத்திணறி உயிரிழப்பு

டாக்டர்கள் வந்து குழந்தையை பரிசோதனை செய்தபோது, குழந்தை இறந்து போனது தெரியவந்தது.

தினத்தந்தி

வளசரவாக்கம்,

சென்னை வளசரவாக்கம், கிருஷ்ணா தெருவைச் சேர்ந்தவர் பிரதீப் குமார் (வயது 35). இவரது மனைவி ராஜேஸ்வரி (30). இவர்களுக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ளன. இதற்கிடையே 4-வது முறையாக கர்ப்பிணியாக இருந்த ராஜேஸ்வரிக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் 2 நாட்களுக்கு முன்பு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்தனர்.

நேற்று காலை ராஜேஸ்வரி, குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து கொண்டிருந்தார். அப்போது திடீரென குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக டாக்டர்கள் வந்து குழந்தையை பரிசோதனை செய்தபோது, குழந்தை இறந்து போனது தெரியவந்தது.

இதுகுறித்து வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தாய்ப்பால் கொடுக்கும்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டுதான் குழந்தை இறந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்