தமிழக செய்திகள்

காய்கறி சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி

காய்கறி சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது.

தினத்தந்தி

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டார வேளாண்மை உழவர் நலத்துறை அட்மா திட்டத்தின் கீழ் இணை இயக்குனர் லட்சுமி காந்தன், துணை வேளாண்மை இயக்குனர் விஜயலட்சுமி ஆகியோரின் உத்தரவின்படி வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் அறிவுறுத்தலின்படி விவசாயிகளுக்கு காய்கறி சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் திண்டுக்கல் காய்கறி மகத்துவ மைய திட்ட மேலாளர் பெப்டின், காய்கறி மகத்துவ மைய செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தார். தோட்டக்கலை உதவி அலுவலர் பிரகாஷ், குழித்தட்டுகளில் தானியங்கி எந்திரம் மூலம் காய்கறி விதைகள் எவ்வாறு நிரப்பப்படுகின்றன? என்பது பற்றிய செயல் விளக்கம் அளித்தார். இதில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமங்களான நெடும்பலம், ஆதிரங்கம், மேலமருதூர், பளையங்குடி, வேளூர், மணலி, கீராலத்தூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து காண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் வேம்பு ராஜலட்சுமி, வேளாண் அலுவலர்கள் கார்த்திக், அகல்யா ஆகியோர் செய்திருந்தனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு