தமிழக செய்திகள்

அருப்புக்கோட்டையில் மாணவிகளுக்கு பயிற்சி முகாம்

மாணவிகளுக்கு மன அழுத்தம் நீக்கும் ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

தினத்தந்தி

அருப்புக்கோட்டை ரமணாஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதத்துறை சார்பில் மாணவிகளுக்கு மன அழுத்தம் நீக்கும் ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கல்லூரி முதல்வர் தில்லை நடராஜன் தலைமை தாங்கினார். கணிதவியல் துறை பேராசிரியை பவுர்ணா வரவேற்றார். இதில் பிரம்ம குமாரிகள் இயக்கத்தை சேர்ந்த கணேசன் மன அழுத்தத்தை நீக்குவது பற்றி கூறினார். பிரம்ம குமாரி யோகேஸ்வரி தியானம் செய்வதை செயல்முறையாக செய்து காண்பித்தார். ஓய்வு பெற்ற கல்லூரி கணிதத்துறை பேராசிரியை சீதா லட்சுமி நேர்மறை எண்ணங்களின் முக்கியம் பற்றி விளக்கினார். இதில் கலைக்கல்லூரி செயலாளர் இளங்கோவன், சேர்மன் ராமச்சந்திரன், பி.எட்.கல்லூரி செயலாளர் சங்கரநாராயணன், போக்குவரத்து செயலர் விக்னேஷ், அருண் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியை காமாட்சி நன்றி கூறினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து