தமிழக செய்திகள்

விழுப்புரம் மாவட்டத்தில்8 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 41 போலீசார் இடமாற்றம்

விழுப்புரம் மாவட்டத்தில் 8 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 41 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

விழுப்புரம் மாவட்டம் காணை போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மாவட்ட குற்ற ஆவண பதிவேடுகள் துறைக்கும், வளவனூர் போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பத்மநாபன் நெடுஞ்சாலை ரோந்துப்பிரிவு எண் 3-க்கும், பிரம்மதேசம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூங்காவனம் நெடுஞ்சாலை ரோந்துப்பிரிவு எண் 4-க்கும், அனந்தபுரம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் வளவனூர் போலீஸ் நிலையத்திற்கும், செஞ்சி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவி சத்தியமங்கலத்திற்கும், வானூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சசிக்குமார் வளவனூருக்கும், திண்டிவனம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜா அனந்தபுரத்திற்கும், கோட்டக்குப்பம் மகளிர் போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கேத்தரின் மரக்காணம் போலீஸ் நிலையத்திற்கும் இவர்கள் உள்பட 41 போலீசார் மாவட்டத்திற்குள் வெவ்வேறு போலீஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பிறப்பித்துள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து