தமிழக செய்திகள்

காவிரி ஆற்றில் பிணமாக கிடந்த திருநங்கை

குளித்தலை காவிரி ஆற்றில் பிணமாக கிடந்த திருநங்கை யார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டம், குளித்தலை பெரியபாலம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றங்கரையில் தண்ணீரில் 40 வயது மதிக்கத்தக்க திருநங்கை ஒருவர் பிணமாக கிடந்தார். இதனை காவிரி ஆற்றுக்கு குளிக்க வந்த பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.உடனடியாக இதுகுறித்து குளித்தலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.பின்னர் அந்த திருநங்கையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து, திருநங்கை யார்?, தண்ணீரில் மூழ்கி இறந்தாரா?. தற்கொலையா? கொலை செய்யப்பட்டாரா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். காவிரி ஆற்றில் திருநங்கை பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்