தமிழக செய்திகள்

பள்ளத்தில் கார் கவிழ்ந்து திருநங்கை பலி

பள்ளத்தில் கார் கவிழ்ந்து திருநங்கை உயிரிழந்தார்.

தினத்தந்தி

மங்களமேடு:

பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரம் முஸ்லிம் தெருவை சேர்ந்த நாசர் பாஷாவின் மகன் அகமது(வயது 22). அதே தெருவை சேர்ந்த அப்பாசின் மகன் சுதீப்(19). இவர்கள் 2 பேரும் பெரம்பலூர் மாவட்டம், தண்ணீர் பந்தல் கிராமத்தில் உள்ள எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ரெமோ(35) என்ற திருநங்கையுடன் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஒரு காரில் சென்றனர்.மங்களமேட்டை அடுத்துள்ள தேவையூர் பிரிவு ரோடு அருகே திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் திருநங்கை ரெமோ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 2 பேரும் படுகாயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரெமோவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த 2 பேரும் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை