கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

திருச்சி காவிரி - கொள்ளிட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

காவிரி மற்றும் கொள்ளிட கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு திருச்சி மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

தினத்தந்தி

காவிரி ஆற்றில் நீவரத்து அதிகரித்துள்ள நிலையில், முக்கொம்பு அணையில் இருந்து அதிக அளவு தண்ணீ திறக்க வாய்ப்புள்ளதால் காவிரி, கொள்ளிடக் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு திருச்சி மாவட்ட கலெக்டர் வே.சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளா. இதுதொடர்பாக அவா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

காவிரி நீப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் மேட்டூ அணைக்கு நீவரத்து அதிகரித்து அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால், மேட்டூ அணையில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீ வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடாந்து பருவமழை பெய்து வருவதாலும், மேட்டூ அணை முழுக்கொள்ளளவில் இருப்பதாலும், அணைக்கு வரும் நீவரத்தைப் பொருத்து, எந்த நேரத்திலும் முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

எனவே, காவிரி மற்றும் கொள்ளிடக் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும், சலவைத் தொழிலாளாகள் தங்களது உடைமைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, துணி துவைக்கவோ, கால்நடைகளை ஓட்டிச்செல்லவோ வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து