தமிழக செய்திகள்

திருச்சி: லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து - 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்

மணல் லாரி மீது மோதியதில் அரசுப் பேருந்தின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது.

தினத்தந்தி

திருச்சி,

திருச்சியில் இருந்து சென்னை நோக்கி நேற்றிரவு அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. பேருந்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பேருந்து, திருச்சி, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் அருகே வந்துகொண்டிருந்தபோது, திடீரென முன்னால் சென்றுகொண்டிருந்த மணல் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

மணல் லாரி மீது மோதியதில் அரசுப் பேருந்தின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது. இந்த விபத்தில் அரசு பேருந்தில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அப்பகுதியை சேர்ந்தவர்களும், போலீசாரும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

நள்ளிரவில் ஏற்பட்ட இந்த விபத்து காரணமாக திருச்சி, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. விபத்துக்குள்ளான அரசு பேருந்தையும், லாரியையும் கிரேன் மூலம் மீட்டு போலீசார் அப்புறப்படுத்தினர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து