தமிழக செய்திகள்

மறைமலைநகர் அருகே லாரி டிரைவரை கத்தியால் வெட்டி செல்போன் பறிக்க முயற்சி - 3 பேருக்கு வலைவீச்சு

மறைமலைநகர் அருகே லாரி டிரைவரை கத்தியால் வெட்டி செல்போன் பறிக்க முயன்ற 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்தவர் பாலாஜி (வயது 50). லாரி டிரைவரான இவர் நேற்று முன்தினம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த மகேந்திரா சிட்டி அருகே சாலையோரமாக லாரியை நிறுத்திவிட்டு லாரியில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் லாரி டிரைவரை கத்தி முனையில் மிரட்டி அவரிடம் இருந்த செல்போனை கேட்டுள்ளனர். டிரைவர் தர மறுத்ததால் கத்தியால் அவரை லேசாக வெட்டிவிட்டு அங்கிருந்து 3 பேரும் தப்பிச்சென்று விட்டனர்.

இது குறித்து டிரைவர் பாலாஜி மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு 3 பேரை வலைவீசி தடி வருகின்றனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்