தமிழக செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; பெயிண்டர் பலி

திருவண்ணாமலையில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் பெயிண்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தினத்தந்தி

திருவண்ணாமலை தென்மாத்தூர் சு.கீழ்நாச்சிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 47), பெயிண்டர். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். ஏழுமலை, அதே பகுதியை சேர்ந்த அவரது அக்காள் மகன் தேசிங்கு என்பவருடன் மோட்டார் சைக்கிளில் திருக்கோவிலூர் சாலையில் மேலத்திக்கான் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த லாரி ஏழுமலை ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ஏழுமலை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தேசிங்கு பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினார்.

இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தேசிங்கை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து ஏழுமலையின் மனைவி கவிதா கொடுத்த புகாரின் பேரில் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்