தமிழக செய்திகள்

சுரங்கப்பாதை அமைக்கும் பணி: வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானாவில் போக்குவரத்து மாற்றம் - நாளை முதல் அமல்

சென்னை வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானாவில் இருந்து போஜராஜா நகர் வரையில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதையொட்டி இப்பகுதியில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தினத்தந்தி

* கண்ணன் ரவுண்டானாவில் இருந்து வெளியே செல்லும் வாகனங்கள் கண்ணன் தெரு வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

* கண்ணன் ரவுண்டானாவில் இருந்து கண்ணன் தெருவுக்குச் செல்லும் இரு சக்கர வாகனங்கள் பரசுராமன் தெரு - தர்மராஜா கோவில் தெற்குப் பாதை வழியாக கண்ணன் சாலையை சென்றடையலாம்.

* கண்ணன் ரவுண்டானாவில் இருந்து கண்ணன் தெருவுக்குச் செல்லும் இலகுரக மோட்டார் வாகனங்கள் திருவெற்றியூர் சாலை - எம்.எஸ். நாயுடு தெரு சின்ன முனுசாமி தெரு வழியாக கண்ணன் சாலையை அடையலாம்.

* போஜராஜா நகர் செல்ல விரும்பும் கனரக வாகனங்கள் சிபி ரோடு - கொருக்குப்பேட்டை ரெயில்வே கேட் - கண்ணன் தெரு - போஜராஜா நகர் ரெயில்வே கேட் வழியாக போஜராஜா நகரை அடையலாம்.

* கண்ணன் தெருவில் இருந்து கண்ணன் ரவுண்டானா வழியாக வாகனங்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

* கண்ணன் தெருவில் இருந்து கண்ணன் ரவுண்டானாவுக்குச் செல்ல விரும்பும் வாகனங்கள் சின்ன முனுசாமி தெரு - எம்.எஸ். நாயுடு தெரு - சாலை வழியாக கண்ணன் ரவுண்டானாவை அடையலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்