தமிழக செய்திகள்

தூத்துக்குடி மடத்தூர் பத்திரகாளியம்மன் கோவில் கொடை விழா

தூத்துக்குடி மடத்தூர் பத்திரகாளியம்மன் கோவில் கொடை விழா நடந்தது.

தூத்துக்குடி மடத்தூர் இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவில் கொடை விழா ஆண்டு தோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா கடந்த 30-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிசேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்து வருகின்றன. இந்த விழா நாளை(புதன்கிழமை) வரை நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து உள்ளனர்.

SCROLL FOR NEXT