தமிழக செய்திகள்

அதிக சத்தம் வைத்து டி.வி. பார்த்ததை தாய் கண்டித்ததால் 7-ம் வகுப்பு மாணவி தற்கொலை

மாதவரத்தில் அதிக சத்தம் வைத்து டி.வி. பார்த்ததை தாய் கண்டித்ததால் 7-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

சென்னையை அடுத்த மாதவரம் தெலுங்கு காலனியை சேர்ந்தவர் நாகராஜ். இவர், சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலத்தில் தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பிரசாந்தி. இவர்களுடைய மகள் ஏஞ்சல் (வயது 12). இவர் மாதவரத்தில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

ஏஞ்சல், வீட்டில் டி.வி.யை அதிக சத்தமாக வைத்து பார்த்து கொண்டிருந்தார். இதனை அவருடைய தாய் பிரசாந்தி கண்டித்தார். இதில் மனமுடைந்த ஏஞ்சல் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த மாதவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காளிராஜ் மற்றும் போலீசார், மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்