மூத்த குடிமக்களுக்காக தமிழ்நாடு முழுவதும் 1000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும்
கிராமப் பஞ்சாயத்துகளுக்கே நேரில் சென்று இலவச உடல் பரிசோதனை மற்றும் மருந்துகள் வழங்கப்படும். 1 மருத்துவர், 1 செவிலியர், 1 இயன்முறை மருத்துவருடன் இந்தச் சேவை வழங்கப்படும். இதற்காக ரூ.33 கோடி நிதி ஒதுக்கீடு
தமிழரின் பாரம்பரிய விளையாட்டுகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்ல தமிழ்நாடு கிராமிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும் இதற்காக ரூ.42 கோடி ஒதுக்கீடு - நிதியமைச்சர் மரிய வில்சன்
2031-ஆம் ஆண்டிற்குள் பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் 5 லட்சம் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்கப்படும் - நிதியமைச்சர் மரிய வில்சன்
12 மாவட்டங்களில் 12 முதியோர் இல்லங்கள் நிறுவப்படும். இதற்காக ரூ.6.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கருவுற்ற பெண்களுக்கான சேவை மற்றும் உதவி மையங்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்படும்
மகப்பேறு நாள் நெருங்கும் வேளையில் தங்கியிருந்து பயன் பெறலாம்; கட்டணமில்லாமல் உணவு மற்றும் மருத்துவ உதவிகள், தொடர் மருத்துவக் கண்காணிப்பு உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும்; ரூ.23 கோடி நிதி ஒதுக்கீடு -நிதி அமைச்சர் மரிய வில்சன்
பெண்களுக்கு திருமணத்தின் போது அரசு சார்பில் 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை வழங்கும் 'அண்ணன் சீர்' திட்டத்துக்கு ரூ.812 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு. அனைத்து பெண்களுக்கும் பொருந்துமா? அல்லது யாருக்கெல்லாம் பொருந்தும்? எனக் குறிப்பிடப்படவில்லை.
“அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் +1 படிக்கும் மாணவர்களுக்கு ரூ.277 கோடியில் ஹெல்மெட், வாட்டர் பாட்டில் வசதிகளுடன் நவீன BRANDED சைக்கிள் வழங்கப்படும்”
பள்ளி நேரத்திற்கு பிறகு தினமும் ஒரு மணி நேரம் முறைப்படுத்தப்பட்டு விளையாட்டுப் பயிற்சி வழங்கப்படும்.
விளையாட்டு வீரர்களுக்கு நிதி உதவி வழங்க கூடுதலாக ரூ.22 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் ‘பள்ளி நிறைவுத் திட்டம்' அறிவிக்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் 3,734 அரசுப் பள்ளிகள் ரூ.2,132 கோடி மதிப்பில் நவீனமயமாக்கப்பட உள்ளன.
மேலும் 2,514 தொடக்கப் பள்ளிகள் மேம்படுத்தப்படவுள்ளன. 855 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் இத்திட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. நடப்பாண்டிற்கு இத்திட்டத்திற்காக ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறைக்கு ரூ2,022 கோடி ஒதுக்கீடு
ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்வதை நோக்கமாகக் கொண்டு, மாநிலம் முழுவதும் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் உருவாக்கப்படும். இதற்காக ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு - நிதியமைச்சர் மரிய வில்சன்
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் செயற்கை நுண்ணறிவு இயந்திர வழி கற்றல் புதிய தொழிற்பிரிவு தொடக்கம். ரூ.90 கோடி மதிப்பீட்டில் 5 புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் நிறுவப்படும். 22,500 மெக்கானிக்குகளுக்கு மின்சார வாகனங்கள் மற்றும் மின்கலம் பராமரிப்பு பயிற்சி அளிக்க ரூ.3 கோடி ஒதுக்கீடு.
மதுரையில் 300 மாணவர்களின் சேர்க்கையுடன் சட்டக்கல்லூரி தொடங்கப்படும்.
திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட உலகம் உங்கள் கையில் திட்டத்தின் பெயர், வெற்றி மடிக்கணினி திட்டம் என மாற்றி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு ரூ.2,000 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் அடிப்படையில் நீட் தேர்வு முறையினை உடனடியாக ரத்து செய்து பொதுத்தேர்வின் அடிப்படையில் மருத்துவக் கல்விக்கான சேர்க்கையைத் தொடர்ந்திட மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.
மாநிலம் முழுவதும் மாணவர் தங்கும் வசதிகளை மேம்படுத்திட சிறப்பு நோக்கு நிறுவனம் (Special Purpose Vehicle) அமைக்கப்படும்.
நவீன உண்டு உறைவிட பள்ளிகள் நிறுவப்படும்
அரசு பள்ளிகளில் சூப்பர் கிளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம் செயல்படுத்தப்படும்.
10 ஆயிரம் பள்ளிகளில் செயல்படுத்தப்பட உள்ள திட்டத்திற்காக ரூ.139 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தினசரி தூய்மை பணிகள், குடிநீர், கழிப்பறை பராமரிப்பு, 24 மை நேர பாதுகாப்புக்கு திட்டம்
குழந்தைகள் படிக்க பள்ளிகளில் தரமான உட்கட்டமைப்பு வசதிகள் அவசியம் என்பதை உணர்ந்து முடிவு.
3,734 பள்ளிகளில் ரூ.2,132 கோடி செலவில் அரசு பள்ளிகள் நவீனமயமாக்கப்படும்.
போதைப்பொருள் புழக்கம் குறித்த தகவல்களை தெரிவிக்க சிறப்பு செயலி.
மதுபான உற்பத்தி ஆலைகளுக்கான சிறப்புக் கட்டணம் மூலம் அரசுக்கு கூடுதலாக ரூ.1,000 கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் பல்வேறு நடவடிக்கை மூலம் அரசுக்கு ரூ.15,000 கோடி கூடுதலாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலத்தின் வருவாயை அதிகரிக்க வருவாய் மேம்பாட்டுக் குழுவை விரைவில் அரசு அமைக்கவுள்ளது - நிதியமைச்சர் மரிய வில்சன்
தமிழக அரசின் 2026-27-ம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, ஆட்சிப் பொறுப்பில் இருந்த தி.மு.க. அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் வருவாய் வரவுகள் சுமார் ரூ.3 லட்சத்து 44 ஆயிரத்து 575 கோடி என்றும், நிதிப் பற்றாக்குறை சுமார் ரூ.1 லட்சத்து 21 ஆயிரம் கோடி என்றும், வருவாய் பற்றாக்குறை ரூ.48 ஆயிரத்து 696 கோடியே 32 லட்சம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 2026-2027-ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு ரூ.560 கோடி நிதி ஒதுக்கீடு.
வறுமை இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க, 2026ம் ஆண்டுக்குள் 1.5 ட்ரில்லியன் டாலர் பொளாதாரம் உள்ள மாநிலமாக மாற்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது" - நிதியமைச்சர் மரிய வில்சன்
பல்வேறு சூழ்ச்சிகளை வெற்றி கண்டு ஜனநாயகனாக இந்த அவையில் அமர்ந்திருக்கிறார் முதல்-அமைச்சர். அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியே அரசின் லட்சியம்.3 மாதங்களில் ஏராளமான சாதனைகளை செய்துள்ளது விஜய் அரசு.
எல்லாம் கொடுத்த மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்த மட்டுமே அரசியலுக்கு வந்தவர் முதல்-அமைச்சர் விஜய். சமூகநீதி, சமத்துவம், வறுமை ஒழிப்பு பெண்கள் பாதுகாப்பு ஆகிய கோட்பாடுகளும் ஆட்சி நடக்கிறது என்றார்.
2026-27-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார்.
சபாநாயகர் குறிப்பிட்ட திருக்குறள்!
குறள்:
வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை ஆராய்வான் செய்க வினை
விளக்கம்:
வருவாய் வரும் வழிகளைப் பெருக்கி, வந்த செல்வத்தை வளர்த்து, அதற்குக் வரக்கூடிய இடையூறுகளை ஆராய்ந்து நீக்க வல்லவனிடம் ஒரு செயலைச் செய்யச் கொடுக்க வேண்டும்.
2026-27 நிதி ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் தாக்கலையொட்டி சட்டசபை கூட்டம் தொடங்கியது
தவெக அரசின் முதல் பட்ஜெட் சற்று நேரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், சென்னையில் உள்ள முண்டகக்கண்ணி அம்மன் கோவிலில் அமைச்சர் என்.ஆனந்த் உள்ளிட்டோர் சாமி தரிசனம் செய்தார்.
2026-27 நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை முன்னிட்டு, தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன், தமிழக முதல்-அமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தனது தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் தமிழக முதல்-அமைச்சர் விஜய் சட்டசபைக்கு வருகை தந்துள்ளார்.
2026-27 நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட் சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவைக்கு வருகை தந்துள்ளார்.
2026-27 நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட் சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவைக்கு வருகை தந்துள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், இன்று சட்டப்பேரவையில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அதனை முன்னிட்டு தலைமைச் செயலகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. சட்டசபையில் பட்ஜெட் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. 2026-2027-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்ய உள்ளார்.