தமிழக சட்டசபை தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களை வென்றது. பெரும்பான்மைக்கு 10 இடங்கள் தேவை என்பதால், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தது. அத்போல, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆதரவு எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது.
தனிபெரும்பான்மையை தவெக பெற்று இருப்பதால் ஆட்சி அமைக்க உரிமை கோரி விஜய் 4 வது முறையாக கவர்னரை சந்தித்துள்ளார். கவர்னர் இந்த முறையாவது ஆட்சி அமைக்க அழைப்பாரா? என்ற எதிர்பார்ப்பு தமிழகம் முழுவதும் தவெகவினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதற்கிடயே தவெகவிற்கு பெரும்பான்மை கிடைத்து இருப்பதால் தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.