நெல்லை,
நெல்லையில் வள்ளியூர் அருகே பாலம் ஒன்றின் தடுப்பு சுவர் மீது சரக்கு ஏற்றி கொண்டு சென்ற வாகனம் மோதி விபத்திற்குள்ளானது.
இந்த சம்பவத்தில் வாகனத்தில் இருந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். அவர்கள் குருவன்கோட்டையை சேர்ந்த அரிராமர், முத்துராஜ் என்று அடையாளம் கண்டறியப்பட்டு உள்ளது. இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.