தமிழக செய்திகள்

கஞ்சாவுடன் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது

புதுவையில் கஞ்சா பொட்டலங்களுடன் கல்லூரி மாணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

மங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி தலைமையில் போலீசார் சாத்தமங்கலம் மெயின்ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஏரிக்கரை அருகே சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்களிடம் 3 கஞ்சா பொட்டல்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து 2 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சாத்தமங்கலத்தை சேர்ந்த வசந்த் என்ற வசந்தராஜா (வயது 25), சென்னை மதுரவாயலை சேர்ந்த செல்வா (25) என்பது தெரியவந்தது. கல்லூரி மாணவரான வசந்த், செல்வாவிடம் கஞ்சா வாங்க வந்தபோது போலீசாரிடம் சிக்கி கொண்டார். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பொட்டலங்கள், 2 செல்போன்கள், ரூ.7 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை