தமிழக செய்திகள்

தட்டச்சு தேர்வு தொடங்கியது

தட்டச்சு தேர்வு தொடங்கியது.

தமிழ்நாடு தொழில்நுட்பத்துறை நடத்தும் தட்டச்சு தேர்வு பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று தொடங்கியது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த தமிழ் மொழி ஜூனியர் கிரேடில் 120 மாணவ-மாணவிகளும், சீனியர் கிரேடில் 61 பேரும், ஆங்கில மொழி ஜூனியர் கிரேடில் 249 பேரும், சீனியர் கிரேடில் 100 பேரும் என மொத்தம் 530 பேர் பங்கேற்றுள்ளனர். முதல்நாள் ஜூனியர் கிரேடில் 6 குழுக்கள், சீனியர் கிரேடில் 4 குழுக்கள் என மொத்தம் 10 குழுக்களுக்கு தேர்வு நடைபெற்றது. அறை கண்காணிப்பாளர்கள், தட்டச்சு தேர்வை கண்காணித்தனர். 2-வது நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழ் மொழி ஜூனியர் கிரேடில் 96 மாணவ-மாணவிகளும், சீனியர் கிரேடில் 84 பேரும், ஆங்கில மொழி ஜூனியர் கிரேடில் 186 பேரும், சீனியர் கிரேடில் 118 பேரும் என மொத்தம் 484 பேர் தட்டச்சு தேர்வில் பங்கேற்க உள்ளனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்