தமிழக செய்திகள்

உச்ச மாகாளியம்மன் கோவில் தேர் வெள்ளோட்டம்

அறந்தாங்கி அருகே உச்ச மாகாளியம்மன் கோவில் தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.

அறந்தாங்கி அருகே உள்ள ஆவணத்தான்கோட்டை கிராமத்தில் பிரசித்தி பெற்ற உச்ச மாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக தேர் பழுதடைந்த நிலையில் தேர்திருவிழா நடைபெறவில்லை. இதையொட்டி புதிய தேர் செய்யப்பட்டு வெள்ளோட்டம் நடைபெற்றது. இதையொட்டி உச்ச மாகாளியம்மனுக்கு காலை, மாலை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் உச்ச மாகாகாளியம்மன் பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். காலை 11.30 மணியளவில் தேர் காலில் தேங்காய் உடைத்து தேரோட்டம் நடைபெற்றது. இந்த தேர் 4 வீதிகளில் சுற்றி மீண்டும் கோவிலை வந்தடைந்தது.

மத்திய பட்ஜெட் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும், கிராமங்களை வலிமையாக்கும்: பிரதமர் மோடி

மத்திய பட்ஜெட் தாக்கல்: விலை கூடவும் குறையவும் வாய்ப்புள்ள பொருட்கள் எவை எவை?

ஆபரேசன் சிந்தூருக்கு பின்... மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு ரூ.7.85 லட்சம் கோடி ஒதுக்கீடு

மத்திய பட்ஜெட்டில் ஏழைகளுக்கு எதுவுமில்லை: காங்கிரஸ் தலைவர் கார்கே தாக்கு

ரூபாய் மதிப்பை மீட்டெடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: ப.சிதம்பரம் விமர்சனம்