தமிழக செய்திகள்

கிருஷ்ணகிரியில் ரூ.147.92 கோடியில் 709 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் உதயநிதி ஸ்டாலின்

ரூ.41.51 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 500 திட்டப்பணிகளை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (13.3.2026) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.41.51 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 500 திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ.147.92 கோடி மதிப்பீட்டில் 709 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 10,709 பயனாளிகளுக்கு 326.93 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற திட்டப்பணிகளின் விவரங்கள்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், கனிமங்கள் மற்றும் குவாரிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய பொதுநிதி கீழ், 30.91 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சமுதாய கூடங்கள், கட்டடங்கள், கதிர் அடிக்கும் களங்கள், சிறு பாலங்கள் அமைத்தல், குடிநீர் பணிகள், கழிவுநீர் கால்வாய்கள், சாலைப் பணிகள், சிமெண்ட் சாலைகள், சிறுபாலங்கள், சுகாதார பணிகள், சுற்றுச்சுவர்கள், தடுப்புச் சுவர்கள், தார்சாலைகள் உள்ளிட்ட 491 பணிகள், இயக்கம் மற்றும் பராமரிப்பு இடைவெளி நிரப்பும் திட்டம் 2025 - 2026 -ன் கீழ், 83,000 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பர்கூர் பேரூராட்சி வாரச்சந்தை - சந்தைபேட்டை மேம்பாடு பணி,

நீர்வளத்துறையின் சார்பில் ஒருங்கிணைந்த நீர்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 4.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கிருஷ்ணகிரி வட்டம், கிருஷ்ணகிரி அணையிலிருந்து செல்லும் இடதுபுற ஊற்றக்கால்வாயினை புனரமைக்கும் பணி,

பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், நபார்டு நிதி திட்டத்தின் கீழ், 2.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஓசூர் பாரதியார் நகர், அரசு உயர்நிலைப்பள்ளியில் 10 வகுப்பறைகள், பாகலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 1.88 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8 வகுப்பறைகள், வேப்பனப்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10 வகுப்பறைகள்,

கூட்டுறவுத்துறை சார்பாக, தேன்கனிக்கோட்டை, பர்கூர், கிருஷ்ணகிரி மற்றும் சூளகிரி ஆகிய வட்டங்களில் உள்ள திருமாளிகை, சின்னகொண்ணாம்பட்டி, அக்ரஹாரம், சீகலப்பள்ளி ஆகிய இடங்களில் 4 புதிய பகுதிநேர நியாயவிலைகடைகள்,

என மொத்தம், 41.51 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 500 முடிவுற்ற திட்டப் பணிகளை தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் இன்றைய தினம் திறந்து வைத்தார்.

அடிக்கல் நாட்டப்பட்ட புதிய திட்டப்பணிகளின் விவரங்கள்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மாவட்ட கனிம வள அறக்கட்டளை நிதி, நபார்டு, கனிமங்கள் மற்றும் குவாரிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய பொதுநிதியின் கீழ், 87.72 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடங்கள், சாலைப்பணிகள், சிமெண்ட் கான்கிரீட் சாலைகள், சிறுபாலங்கள், தடுப்பு சுவர்கள், கழிவு நீர் கால்வாய்கள், பள்ளி வகுப்பறை கட்டடங்கள், சமுதாய கூடங்கள், கதிர் அடிக்கும் களங்கள், கல்வெட் அமைத்தல், குடிநீர்

பணிகள், கழிவுநீர் கால்வாய்கள், சாலைப் பணிகள், சிமெண்ட் சாலைகள், சுகாதார பணிகள், சுகாதார வளாகம், சுற்றுச்சுவர்கள், தடுப்புச் சுவர்கள், நிழற்கூடம் உள்ளிட்ட 706 பணிகள்,

நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் 24.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாலூர் - ஓசூர் - அதியமான்கோட்டை சாலை இருவழித்தடத்திலிருந்து நான்கு வழி சாலையாக அகலப்படுத்தி வலுப்படுத்தும் பணி, நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் திட்டத்தின் கீழ், 6.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தேன்கனிக்கோட்டை - அஞ்செட்டி - நாட்றம்பாளையம் உயர்மட்ட பாலம் கட்டும் பணி,

வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் சார்பில் 30.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஓசூரில் புதிய ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டடம் கட்டும் பணி என மொத்தம், 147.92 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 709 புதிய திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் இன்றைய தினம் அடிக்கல் நாட்டினார்.

அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய விவரங்கள்

வருவாய்த் துறையின் சார்பில் 3,600 பயனாளிகளுக்கு 126.00 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டுமனைப் பட்டாக்கள், 21 பயனாளிகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள், 117 பயனாளிகளுக்கு முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 25.22 லட்சம் ரூபாய் நிதியுதவி, 122 பயனாளிகளுக்கு 122.00 லட்சம் ரூபாய்க்கான விபத்து நிவாரண உதவித்தொகை காசோலைகள்,

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் 3,500 பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 122.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வீடுகள் கட்டுவதற்கான ஆணைகள்,

மகளிர் திட்டம் சார்பில் சிறப்பு சுய உதவிக் குழுக்களுக்கான வாழ்வாதார நிதி, சுழல் நிதி மற்றும் சமுதாய முதலீட்டு நிதி, உயர் ஆடை உற்பத்தி நிறுவனம், ஒருங்கிணைந்த பண்ணை தொகுப்புகள், மகளிர் தனி நபர் தொழிற்கடன், மகளிர் உதவிக்குழுக்களுக்கான சமுதாய முதலீட்டு நிதி ஆகிய திட்டங்களின் கீழ் 1,243 மகளிருக்கு 52.49 கோடி ரூபாய் கடனுதவிகள்,

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், 180 பயனாளிகளுக்கு 11.88 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒருங்கிணைந்த பண்ணையம், 20 பயனாளிகளுக்கு 54.00 லட்சம் ரூபாய் மதிப்பிலான சுழற்கலப்பைகள்,

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறையின் சார்பில், 510 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள்,

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில், 18 பயனாளிகளுக்கு 55.02 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிழல்வலை கூடாரங்கள், 13 பயனாளிகளுக்கு 1.57 கோடி ரூபாய் மதிப்பில் பாலித்தீன் பசுமைக்குடில்கள், 5 பயனாளிகளுக்கு 10.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான முதல்-அமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள்,

வேளாண் பொறியியல் துறையின் சார்பில், 19 பயனாளிகளுக்கு வைக்கோல் கட்டும் இயந்திரம் தீவன புல் வெட்டும் கருவி, இயந்திர உழுவைகள், இயந்திர களை எடுக்கும் கருவிகள், சூரிய மின்மோட்டார்கள் ஆகிய வேளாண் இயந்திரங்களையும்,

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், 21 பயனாளிகளுக்கு மானியத்துடன் 1.05 லட்சம் ரூபாய் மதிப்பிலான வணிக ரீதியிலான உலர் / ஈர மாவு அரைக்கும் இயந்திரங்கள்,

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில், 10 பயனாளிகளுக்கு தலா 41,820 ரூபாய் மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்கள்,

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், 344 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், திறன்பேசிகள், சக்கர நாற்காலிகள், காதொலிகருவிகள், ஆவின் பாலகம் அமைத்திட மானியம் மற்றும் உதவி உபகரணங்கள்,

தாய், தந்தை இழந்த மற்றும் தாய், தந்தை நிரந்தர முடக்கம் அடைந்ததனால் பாதிக்கப்பட்ட 10 மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பாக நிதி உதவி,

வங்கிகளின் சார்பில், 136 மாணவ, மாணவிகளுக்கு 8.68 கோடி ரூபாய் கல்வி கடனுதவிகள்

தாட்கோ சார்பில், 2 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின சமூக பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தொழில் தொடங்குவதற்காக மானியத்துடன் 14.73 லட்சம் ரூபாய் கடனுதவி,

மருத்துவம் (ம) ஊரக நலப்பணிகள் துறையின் சார்பில், 100 பயனாளிகளுக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகள்,

கூட்டுறவுத்துறையின் சார்பில், 77 பயனாளிகளுக்கு 1.02 கோடி ரூபாய்க்கான பயிர்கடன், 48 பயனாளிகளுக்கு 24.52 லட்சம் ரூபாய்க்கான கால்நடைபராமரிப்பு கடன், மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 432 உறுப்பினர்களுக்கு 4.77 கோடி ரூபாய்க்கான மகளிர் சுயஉதவிக்குழு கடன்,

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில், 10 பயனாளிகளுக்கு கலைஞர் கைவினை திட்டத்தின் கீழ் மானியத்துடன் 14.30 லட்சம் ரூபாய்க்கான தொழில் தொடங்குவதற்கான கடனுதவி, 11 பயனாளிகளுக்கு தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மானியத்துடன் 56.16 லட்சம் ரூபாயக்கான கடனுதவி,

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 40 பயனாளிகளுக்கு 40.00 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனை இ-பட்டாக்கள்,

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சார்பில், 100 கட்டுமான தொழிலாளர்களுக்கு 1.20 லட்சம் ரூபாய்க்கான ஓய்வூதியம்,

என பல்வேறு துறைகளின் சார்பில், மொத்தம் 10,709 பயனாளிகளுக்கு 326.93 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, நாடாளுமன்ற உறுப்பினர் கே.கோபிநாத், சட்டமன்ற உறுப்பினர்கள் ஒய்.பிரகாஷ், தே.மதியழகன், டி.ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சித் தலைவர் ச.தினேஷ் குமார், ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, துணை மேயர் எம்.ஆனந்தைய்யா, ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் முகமது ஷபீர் ஆலம், மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.கவிதா, சார் ஆட்சியர் ஆக்ரிதி சேத்தி, கோட்டாட்சியர் நா. ஷாஜகான் உள்பட அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.