தமிழக செய்திகள்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கருட சேவை உற்சவத்தில் தவறி கீழே விழுந்த குடை - பக்தர்கள் கலக்கம்

கருட சேவை உற்சவத்தில் மூன்று இடங்களில் குடை தவறி விழுந்தது.

தினத்தந்தி

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவத்தை ஒட்டி மூன்றாம் நாளான இன்று தங்க கருட சேவை உற்சவம் நடைபெற்றது. தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாளுக்கு இருபுறமும் திருகுடைகளை கோவில் பட்டாச்சாரியார்கள் பிடிக்கும் நிலையில் சுவாமியை சுமந்து செல்லும் பாதம் தாங்கிகள் அவ்வப்போது கருட வாகனத்தை குலுக்குவது வழக்கம்.

அந்த வகையில் பாதம் தாங்கிகள் தங்க கருட வாகனத்தை குலுக்கிய போது திருக்குடைளை பிடிக்க முடியாமல் கோவில் பட்டாச்சாரியார்கள் தவறவிட்டனர்.

கருட சேவை வீதி உலாவின் போது செட்டி தெரு,திருகச்சி நம்பி தெரு,கச்சபேஸ்வரர் கோவில் சந்திப்பு ஆகிய இடங்களில் திருக்குடைகள் சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட நிலையில் கருட சேவை உற்சவத்தில் திருக்குடைகள் சரிந்து விழுந்த சம்பவத்தால் ஏதேனும் தீங்கு நேருமோ என பக்தர்கள் கலக்கம் அடைந்து உள்ளனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து