தமிழக செய்திகள்

கம்பம் அருகே முல்லைப்பெரியாற்றில் ஆண் பிணம்

கம்பம் அருகே முல்லைப்பெரியாற்றில் ஆண் பிணம் கிடந்தது.

தினத்தந்தி

கம்பம் அருகே சுருளிப்பட்டியில் உள்ள தொட்டன்மன்துறை முல்லைப்பெரியாறு தடுப்பணை பகுதியில் ஆண் பிணம் மிதப்பதாக கம்பம் தெற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் மற்றும் கம்பம் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, ஆற்றில் மிதந்த ஆண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இறந்தவர் சுருளிப்பட்டியை சேர்ந்த சரவணன் (வயது 38) என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரவணன் ஆற்றில் குறித்து தற்கொலை செய்துகொண்டாரா? ஆற்றில் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி இறந்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்