தமிழக செய்திகள்

போடி கண்மாயில் ஆண் பிணம்

போடியில் கண்மாயில் ஆண் பிணம் மிதந்தது.

தினத்தந்தி

போடியில், தேனி சாலையில் பங்காருசாமி கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் நேற்று காலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மிதந்தது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் போடி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், தீயணைப்பு படைவீரர்கள் உதவியுடன் கண்மாயில் மிதந்த ஆண் பிணத்தை மீட்டனர்.

பின்னர் அதனை பிரேத பரிசோதனைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்மாயில் இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் கண்மாயில் மூழ்கி இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து