கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

தாம்பரம்-தன்பாத் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரெயில்

தாம்பரம்-தன்பாத் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பயணிகளின் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக வரும் 30-ந்தேதி தாம்பரத்தில் இருந்து ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்திற்கு இரவு 10 மணிக்கு முன்பதிவில்லா சிறப்பு ரெயில் (வண்டி எண்.06077) புறப்படும். இந்த ரெயில் ஜூலை 3-ந்தேதி காலை 5.30 மணிக்கு தன்பாத் சென்றடையும்.

மறுமார்க்கமாக, தன்பாத்தில் இருந்து ஜூலை 4-ந்தேதி மதியம் 3.35 மணிக்கு முன்பதிவில்லா சிறப்பு ரெயில் (வண்டி எண்.06078) புறப்பட்டு 6-ந்தேதி இரவு 10 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த ரெயில், எழும்பூர், சூலூர்பேட்டை, நெல்லூர், குண்டூர், ஜபல்பூர் உள்ளிட்ட 23 ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது