சென்னை,
திருப்பதியில் நடைபெறும் கருட சேவையை முன்னிட்டு, பயணிகளின் கூடுதல் நெரிசலை சமாளிக்கும் வகையில் தெற்கு கடற்கரை ரெயில்வே சார்பில் முன்பதிவில்லா மெமு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.
ரெயில் எண் 07610 திருப்பதி - சென்னை கடற்கரை முன்பதிவில்லா மெமு சிறப்பு ரெயில், செப்டம்பர் 20-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு திருப்பதியில் இருந்து புறப்படும்.
இந்த ரெயில் அதிகாலை 4.30 மணிக்கு சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தை சென்றடையும். இந்த சிறப்பு ரெயில் ஒரு சேவை மட்டும் இயக்கப்படும்.
ரெயில் எண் 07609 சென்னை கடற்கரை - ரேணிகுண்டா முன்பதிவில்லா மெமு சிறப்பு ரெயில், செப்டம்பர் 20-ம் தேதி காலை 5 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும்.
இந்த ரெயில் காலை 8.40 மணிக்கு ரேணிகுண்டாவை சென்றடையும். இதுவும் ஒரு சேவையாக மட்டுமே இயக்கப்படும்.