தமிழக செய்திகள்

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு விழுப்புரம் வேணுகோபாலசாமி கோவிலில் உறியடி திருவிழா

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு விழுப்புரம் வேணுகோபாலசாமி கோவிலில் உறியடி திருவிழா நடைபெற்றது.

தினத்தந்தி

விழுப்புரம் வி.மருதூர் பஜனை கோவில் தெருவில் மிகவும் பிரசித்தி பெற்ற வேணுகோபாலசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு காலை 6 மணிக்கு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சாமிக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு 7 மணியளவில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து காலை 10 மணியளவில் உறியடி நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். முன்னாள் நகரமன்ற தலைவர் ஜனகராஜ், காங்கிரஸ் நகர தலைவர் செல்வராஜ், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் பாபுகோவிந்தராஜ், பொதுக்குழு உறுப்பினர் அருள், நகர செயலாளர் சம்பந்தம், தி.மு.க. நகர இலக்கிய அணி பொருளாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் பகுதியை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டு உறியடித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து, சாமி வீதியுலா நடைபெற்றது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்