தமிழக செய்திகள்

வளர்பிறை அஷ்டமி வழிபாடு

வளர்பிறை அஷ்டமி வழிபாடு நடைபெற்றது.

தோட்டக்குறிச்சி சேங்கல் மலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற சொர்ண பைரவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று வளர்பிறை அஷ்டமியையொட்டி சுவாமிக்கு பால், இளநீர், பன்னீர், சந்தனம் உள்பட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பூக்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. அப்போது பூஜையில் பக்தர்கள் தங்களிடம் இருந்து தங்கம், வெள்ளி பொருட்களை கொடுத்து திரும்ப பெற்று கொண்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண் சாமி தரிசனம் செய்தனர். 

SCROLL FOR NEXT