தமிழக செய்திகள்

சாலையோர பனை மரத்தில் வேன் மோதி விபத்து - டிரைவர் உயிரிழப்பு

ராமநாதபுரம் அருகே சாலையோர பனை மரத்தில் வேன் மோதிய விபத்தில் டிரைவர் உயிரிழந்து உள்ளார்.

தினத்தந்தி

ராமநாதபுரம்,

தேனி மாவட்டம் கண்டமனூர் பகுதியை சேர்ந்த 20 பேர் ஒரு வேனில் ராமேசுவரம் வந்து கொண்டிருந்தனர். இவர்கள் வந்த வேன் உச்சிப்புளி என்ற இடத்தில் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோத்தில் இருந்த பனை மரத்தில் மோதி விபத்துக்கு உள்ளானது.

இந்த விபத்தில் வேன் டிரைவர் நவநீதன் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவம் இடத்துக்கு விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்