தமிழக செய்திகள்

வந்தே பாரத் ரெயில்களை 14 நிமிடத்தில் தூய்மை செய்து சாதனை

வந்தே பாரத் ரெயில்களை 14 நிமிடத்தில் தூய்மை செய்து ரயில்வே ஊழியர்கள் சாதனை படைத்தனர்.

தினத்தந்தி

சென்னை,

குப்பையில்லா இந்தியாவை உருவாக்கும் நோக்கில் இன்று தெற்கு ரெயில்வேக்குள்பட்ட ரெயில் நிலையங்களில் சிறப்பு தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. இதன் ஒரு பகுதியாக தெற்கு ரெயில்வேயில் இயக்கப்படும் 3 வந்தே பாரத் ரெயில்களை ரெயில் நிலையத்திற்கு வந்தடைந்த 14 நிமிடத்துக்குள் தூய்மை செய்து சாதனை படைத்துள்ளனர்.

அதன்படி, கோவையிலிருந்து சென்னை சென்டிரலுக்கு காலை 11.50 மணிக்கு வந்த வந்தே பாரத் ரெயில், நெல்லையிலிருந்து சென்னை எழும்பூருக்கு பகல் 1.50 மணிக்கு வந்தே பாரத் ரெயில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து காசர்கோடுக்கு பகல் 1.20 மணிக்கு வந்த வந்தே பாரத் ரெயில் ஆகியவற்றை 14 நிமிடத்துக்குள் ஊழியர்கள் தூய்மை செய்து சாதனை படைத்துள்ளனர்.

இத்திட்டம் ஜப்பானின் புல்லட் ரெயில் தூய்மையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதன் மூலம் ரெயில் சேவையின் ஒட்டுமொத்த செயல்திறன் அதிகரிப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்