தமிழக செய்திகள்

சென்னை சென்டிரல் - கோவை இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில்..!!

கூட்ட நெரிசலை தவிர்க்க வந்தே பாரத் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ரெயில் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க நெல்லை- கோவை இடையே வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

சென்னை சென்டிரலில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு கோவை நோக்கி செல்லும் வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண். 06035) நாளை (28-ந்தேதி), டிசம்பர் 5, 12, 19, 26 மற்றும் ஜனவரி 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் (செவ்வாய்கிழமை) அதே நாள் மதியம் 2.15 மணிக்கு கோவை சென்றடையும்.

மறுமார்க்கமாக, அதே தேதிகளில் கேவையிலிருந்து மதியம் 3.05 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் நோக்கி செல்லும் வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரெயில் (06036) அதே நாள் இரவு 9.50 மணிக்கு சென்னை சென்டிரல் சென்றடையும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து