தமிழக செய்திகள்

வன்னியர் இடஒதுக்கீடு: தமிழக அரசு கடமையை செய்ய தவறுகிறது - டாக்டர் ராமதாஸ்

10.5 சதவீத வன்னியர் இட ஒதுக்கீட்டை வழங்க தமிழக அரசு மறுக்கிறது என்று ராமதாஸ் கூறினார்.

தினத்தந்தி

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உழைக்கும் மக்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு. தமிழ்நாட்டில் இல்லை, மராட்டியத்தில் சுப்ரீம் கோர்ட்டால் ரத்து செய்யப்பட்ட மராத்தா இட ஒதுக்கீட்டை, மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையுடன் மீண்டும் கொண்டு வருகிறது மராட்டிய அரசு.

அதற்காக அம்மாநில சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டு, இடஒதுக்கீட்டு சட்டம் நிறைவேற்றப்படுகிறது. இது தான் சமூகநீதி. ஆனால், சுப்ரீம் கோர்ட்டே வழங்க வலியுறுத்தியும் 10.5 சதவீத வன்னியர் இட ஒதுக்கீட்டை வழங்க மறுக்கிறது தமிழக அரசு. கடமையை செய்ய தவறுகிறது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம். இப்போது சொல்லுங்கள். இங்குள்ளவர்களுக்கு சமூகநீதி குறித்து பேச தகுதி உள்ளதா?

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு