திருவாரூர் மாவட்டம், சேரன்குளம் வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் வசந்த உற்சவம் நடைபெற்றது. அப்போது உற்சவர் சீனிவாச பெருமாளை பல்வேறு வகையான பழங்களை கொண்டு அலங்கரிக்கப்பட்ட வசந்த மண்டபத்தில் எழுந்தருள செய்தனர். பின்னர் பெருமாளுக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தன. பின்னர் கோவிலின் உள்பிரகாரத்தில் சாமி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.