தமிழக செய்திகள்

நாளை நடைபெற இருந்த வி.சி.க. உயர்நிலைக் கூட்டம் ரத்து

த.வெ.க.வுக்கு ஆதரவு அளிப்பது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக நாளை வி.சி.க. உயர்நிலைக் கூட்டம் நடைபெற இருந்தது.

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23-ந்தேதி நடைபெற்றது. தொடர்ந்து, தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4-ந்தேதி எண்ணப்பட்டன. இதில் த.வெ.க. 108 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 73 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகம் தேர்தலில் வெற்றி பெற்றாலும், ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்காக த.வெ.க. சார்பில் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைக்க முழு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

இதனிடையே, த.வெ.க.வுக்கு ஆதரவு அளிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். இது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக நாளை வி.சி.க. உயர்நிலைக் கூட்டம் நடைபெற இருந்தது. இந்த நிலையில், நாளை நடைபெற இருந்த வி.சி.க. உயர்நிலைக் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை பெறுவதில் த.வெ.க.வுக்கு சிக்கல் நீடித்து வருகிறது.