தமிழக செய்திகள்

ஆக்சிஜன் உற்பத்தியை 2 வாரத்துக்குள் தொடங்க வேதாந்தா நிறுவனம் திட்டம்

தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் 2 வாரத்துக்குள் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்க வேதாந்தா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 1,000 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் திரவ நிலையிலான ஆக்சிஜன் தேவை கணிசமாக அதிகரித்துள்ளது. தமிழகத்துக்கு தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்து தருவதாக, தூத்துக்குடியில் மூடப்பட்டிருக்கும் ஸ்டெர்லைட் நிர்வாகம் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தது.

இதுதொடர்பாக விவாதிப்பதற்காக, சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில், ஆக்சிஜன் உற்பத்தி செய்ய தற்காலிக அனுமதி கொடுக்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டில் விருப்பம் தெரிவித்தபோது, தமிழக அரசு அனுமதி அளித்தால் 7 முதல் 14 நாட்களுக்குள் உற்பத்தியை தொடங்குவதாக ஸ்டெர்லைட் நிர்வாகம் தெரிவித்து இருந்தது. தமிழக அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இன்னும் 2 வார காலத்துக்குள் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக ஸ்டெர்லைட் ஆலையை நிர்வகித்து வரும் வேதாந்தா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

மருத்துவ தர ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் நோக்கத்துக்காக 1,000 டன் முழு உற்பத்தித் திறனையும் கிடைக்கச் செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். மேலும் இதை தமிழகத்தின் தேவைப்படும் பகுதிகளுக்கு முன்னுரிமை அடிப்படையிலும், இதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் அனுப்பும் தளவாடங்களை எந்த வகையில் சிறப்பாக கையாளுவது என்பது குறித்து நிபுணர்களுடன் இணைந்து ஏற்கனவே விவாதித்து வருகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்