கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை கிடுகிடு உயர்வு

சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை அதிகரித்து உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை கிடுகிடுவென அதிகரித்து உள்ளது. விளைச்சல் குறைந்துள்ளதால், தக்காளியின் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக கோயம்பேடு சந்தையில் தக்காளியின் விலை கிலோ ரூ.70 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் காலிப்ளவர் கிலோ ரூ. 40 ஆகவும், முட்டைகோஸ் 40 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு, சின்ன வெங்காயம், கேரட் 35 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்படுகிறது. அவரை 40 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 30 ரூபாய்க்கும், வரி கத்தரி 25 ரூபாய்க்கும் பச்சை மிளகாய் 25 ரூபாய்க்கும் இஞ்சி 35 ரூபாய்க்கும், பீட்ரூட் 32 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை