தமிழக செய்திகள்

கவர்னர் வருகை: நீலகிரி, கோத்தகிரி சாலையில் நாளை காலை முதல் மதியம் வரை போக்குவரத்துக்கு தடை

கவர்னர் வருகையால் நீலகிரி, கோத்தகிரி சாலையில் நாளை காலை முதம் மதியம் வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

நீலகிரி,

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழங்களில் துணை வேந்தர்களுடன் ஊட்டியில் கவர்னர் ஆர்.என். ரவி 2 நாள் மாநாடு நடத்தினார். கடந்த 25 மற்றும் 26-ம் தேதி இந்த மாநாடு நடைபெற்றது.

இந்நிலையில், கவர்னர் ஆர்.என். ரவி சாலை மார்க்கமாக நாளை உதகையில் இருந்து கோத்தகிரி வழியாக கோவை செல்ல உள்ளார். இதனை தொடர்ந்து நீலகிரி, கோத்தகிரி சாலையில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை வாகனப்போக்குவரத்துக்கு தடை விதிக்கபடுவதாக காவல்துறை அறிவித்துள்ளது.

இதனால், அனைத்து வாகனங்களும் குன்னூர் பர்லியார் வழியாக உதகை - மேட்டுப்பாளையம் செல்ல அனுமதிக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்