தமிழக செய்திகள்

போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு பொதட்டூர்பேட்டை போலீஸ்நிலையம் பின்புறம் வீணாக கிடக்கும் வாகனங்கள்; ஏலத்தில் விட பொதுமக்கள் கோரிக்கை

போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு பொதட்டூர்பேட்டை போலீஸ்நிலையம் பின்புறம் வீணாக கிடக்கும் வாகனங்களை ஏலத்தில் விடவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினத்தந்தி

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டை போலீஸ்நிலையம் ஊருக்கு சற்று தொலைவில் பொதட்டூர்பேட்டை துணை மின் நிலையம் எதிரே அமைந்துள்ளது. இந்த போலீஸ் நிலையம் எல்லைக்குள் நடக்கும் சாலை விபத்துகளால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களையும், சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு பின்புறம் நிறுத்தி வைத்துள்ளனர். இதில் ஏராளமான இருசக்கர வாகனங்களும், ஆட்டோ, டிராக்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டு பல நாட்களாக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஏலத்தில்விட கோரிக்கை

இந்த வாகனங்கள் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் கிடப்பதால் துருப்பிடித்து வீணாகி பாழாகி வருகின்றன. இந்த வாகனங்களை பொது ஏலத்தில் விட்டால் அரசுக்கு நல்ல வருமானம் கிடைக்கும் என்று இந்த பகுதி மக்கள் கருதுகின்றனர். மேலும் வாகனங்கள் வீணாவதால் யாருக்கு என்ன பயன் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்த வாகனங்கள் சற்று நல்ல நிலையில் இருக்கும்போது அவற்றை ஏலத்தில் விட்டால் அரசுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். ஆகவே அவற்றை ஏலத்தில் விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை