தமிழக செய்திகள்

ரத்தினகிரியில் 3 கார்கள் மோதிக் கொண்ட விபத்தில் 7 பேர் உயிரிழப்பு

வேலூர் அருகே ரத்தினகிரியில் 3 கார்கள் மோதிக் கொண்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

வேலூர்,

வேலூர் மாவட்டம் ரத்தினகிரியில் நெடுஞ்சாலையில் சென்ற மூன்று கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து நேரிட்டது. மோதிய வேகத்தில் கார்கள் நொறுங்கியது. உடனடியாக உயிருக்கு போராடியவர்களை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சம்பவ இடத்திலே 5 பேர் பலியாகிவிட்டனர். காயம் அடைந்த 6 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுடைய நிலையானது கவலைக்கிடமாக உள்ளது, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவித்தன. காயம் அடைந்தவர்களில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிகை 7 ஆக உயர்ந்து உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்