தமிழக செய்திகள்

வேலூர் பாராளுமன்ற தொகுதி: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி ; முடிவு 4.30 மணிக்கு அறிவிப்பு

வேலூர் பாராளுமன்ற தொகுதி: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி. தேர்தல் முடிவு 4.30 மணிக்கு அறிவிக்கப்படும் என தேர்தல் அதிகாரி கூறி உள்ளார்.

தினத்தந்தி

வேலூர்

வேலூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க. சார்பில் கதிர்ஆனந்தும், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமியும் இவர்கள் உள்பட 28 பேர் போட்டியிட்டனர். 

ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.  காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது. தபால் வாக்குகள் எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகம் முன்னிலை பெற்று இருந்தார்.

தொடர்ந்து வாக்குகள் முன்னிலை விவரம் மாறிக்கொண்டே இருந்தது.  முதல் 15 சுற்றுகள் வரை அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகம் முன்னிலையில் இருந்தார். தொடர்ந்து வாக்கு எணிணிக்கை நடைபெற்ற போது திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை பெற்றார். இறுதி சுற்று முடிவின் போது கதிர் ஆனந்த் 8141 வாக்குகள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றார்.

கதிர் ஆனந்த் - திமுக - 4,85,340

ஏ.சி.சண்முகம் - அதிமுக - 4,77,199

தீபலட்சுமி - நாம்தமிழர் கட்சி - 26,995

நோட்டா - 9,805

 6 சட்டமன்ற தொகுதியில் 4 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்று உள்ளது. கே.வி குப்பம், வேலூர் , வாணியம்பாடி தொகுதிகளில் திமுக அதிக வாக்குகள் பெற்றுள்ளது.அணைக்கட்டு தொகுதியில் அதிமுக அதிக வாக்குகள் பெற்றுள்ளது.

வேலூர் தொகுதியிலும் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றது

அதிமுக பெற்ற வாக்குகள் - 72626 , திமுக பெற்ற வாக்குகள் - 78912 , வாக்கு வித்தியாசம் - 6286

வாணியம்பாடி தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நிறைவு  பெற்றது 19 சுற்றுகளாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றது 

திமுக பெற்ற வாக்குகள் திமுக - 90718, அதிமுக பெற்ற வாக்குகள் - 68923 வாக்கு வித்தியாசம் - 21795

திமுக வெற்றி பெற்றதை தொடர்ந்து அண்ணா அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாலை 4.30 மணிக்கு வேலூர் மக்களவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்து உள்ளார்.

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க 46. 49 சதவீத வாக்குகளும் தி.மு.க  47.33 சதவீத வாக்குகளும் நாம் தமிழர் 2. 62 சதவீத வாக்குகளும் பெற்று உள்ளன.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு